டெல்லியில் சர்வதேச மதச் சுதந்திர மாநாடு

Subscribe to Oneindia Tamil

கோவை:

மதச் சுதந்திரம் பற்றி விவாதிக்க சர்வதேச அளவிலான மாநாடு டெல்லியில் வரும் நவம்பர் மாதம் 15ம் தேதிநடக்கிறது.

கோவை ஆர்ஷா வித்யா குருகுல நிறுவனர் சுவாமி தயானந்த சரஸ்வதி இது குறித்து தெரிவித்ததாவது:

உலகில் உள்ள பல வகையான மதங்களின் தோன்றலால், பல்வேறு கருத்துக்கள் உருவாகி வருகிறது. மேலும் சுற்றுச்சூழல் அழிவால் மனிதனுக்கு ஏற்படும் தீங்குகளை எவ்வாறு எதிர் கொள்வது என்பது பற்றி விவாதிக்க டெல்லியில்சர்வதேச அளவிலான மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பிரிந்து போன பல மதங்களை ஒன்றாக இணைத்து செயல்படுவதற்கான செயல் திட்டங்கள் இந்த மாநாட்டில்உருவாக்கப்படும்.

நவம்பர் மாதம் 15ம் தேதி நடக்கும் இதில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆன்மீகத் துறவிகள்பங்கேற்கின்றனர்.அனைத்து மதத்தினரும் இதில் கலந்து கொள்வர்.

இவ்வாறு அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வதால் மக்களின் மனதில் அமைதி ஏற்படும். உலகம் அமைதிபெறும். உலகமயமாக்கல் கொள்கையால் சர்வதேச எல்லைகள் மறைந்து போகும் சூழல் உள்ளது.

இந்த நிலையில், மதங்கள் எப்படி சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்பது பற்றிய கருத்துக்கள் இந்த மாநாட்டில்இடம் பெறும். நாட்டின் கலாச்சாரக் கோட்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை மதங்கள் மட்டுமே ஒழுங்கு படுத்தமுடியும் என்றார் தயானந்த சரஸ்வதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+