பா.ஜ.கவும் ஆளுநர் உரையை புறக்கணிக்கிறது
சென்னை:
தி.மு.க கூட்டணிக் கட்சிகளான பாரதீய ஜனதா, எம்.ஜி.ஆர். அ.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியகட்சிகளும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆளுநர் உரையைப் புறக்கணிக்க மாட்டோம் என பாரதீய ஜனதாக் கட்சி அறிவித்திருந்தது. ஆனால்திடீரென தற்போது முடிவை மாற்றிக் காண்டு, நாங்களும் புறக்கணிப்போம் என பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.
பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சென்னையில் செவ்வாய்க்கிழமை மாநில தலைவர் கிருபாநிதி தலைமையில் நடந்தது. அக்கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.கட்சியின் நிலைக்குழுக் கூட்டம் சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் ஆளுநர்உரையை புறக்கணிக்க முடிவு செய்ததாக கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கிறது. இதுதொடர்பாக கட்சி பொதுச் செயலாளர்திருநாவுக்கரசு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications