காலில் விழுவதை எதிர்க்கிறார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அமைச்சர்கள் முதல் அதிமுக எம்எல்ஏக்கள் வரை அனைவரும் தன் காலில் விழுந்து வணங்கியதால், தர்மசங்கடம்அடைந்த முதல்வர் ஜெயலலிதா, பதவிப் பிரமாண நிகழ்ச்சி முடியும்வரை சபைக்கு வரவில்லை.

12ஆவது சட்டசபை கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை கூடியது. கூட்டத் தொடரின் முதல் நிகழ்ச்சியாக 230எம்எல்ஏக்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

வழக்கம்போல, தங்கள் தலைவியும் முதல்வருமான ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கி அதிமுகஎம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இது, சட்டசபையில் பலருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதோடுமட்டுமல்லாமல், முதல்வர் ஜெயலலிதாவுக்கே கூட பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

ஒன்றன்பின் ஒன்றாக வந்த அமைச்சர்களும், அதிமுக எம்எல்ஏக்களும் முதல்வர் ஜெயலலிதாவின் காலைத் தொட்டுவணங்கினர். சட்டசபைக்குள்ளேயே அவர்கள் இவ்வாறு தன் காலைத் தொட்டு வணங்கியதால் தர்மசங்கடம்அடைந்த முதல்வர், காலை 11.12 மணிக்கு தன்னுடைய அறைக்குள் சென்று விட்டார்.

உறுப்பினர்கள் அனைவரும் பதவி ஏற்று முடியும்வரை முதல்வர் ஜெயலலிதா சபைக்குள் வரவே இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+