For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின் ஊழியர் போராட்டம் .. இதுவரை நஷ்டம் ரூ. 250 கோடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நெய்வேலி அனல் மின் நிலைய ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைகிறது. போராட்டத்தின் காரணமாக மின்உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழக ஊழியர்கள் ஊதிய விகிதத்தை மாற்றக் கோரி போராட்டம் நடத்திவருகிறார்கள். முதலில் விதிப்படி வேலை என்ற போராட்டத்தை மேற்கொண்ட இவர்கள் தற்போதுகாலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நெய்வேலி மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. நிலையத்தில் உள்ள 2 அனல் மின் நிலையங்களிலிருந்து மொத்தம் 2070 மெகாவாட்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா,பாண்டிச்சேரி ஆகிய மாநலங்களுக்கு வழங்கப்படுகிறது.

வேலைநிறுத்தம் காரணமாக தற்போது முதல் மின்உற்பத்தி நிலையம் முழுமையாக இயங்கவில்லை. 2-வதுநிலையத்தில் உற்பத்தி கிட்டத்தட்ட முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 220 மெகாவாட் மின்சாரம் மட்டுமேஉற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் தினசரி மின்தேவை 6200 மெகாவாட் ஆகும். இதில் நெய்வேலியிலிருந்து 700 மெகாவாட்மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த அளவு இப்போது குறைந்து விட்டது. இதேபோல, பிற தென்மாநிலங்களுக்குரிய அளவும் குறைந்து விட்டது. இதுவரை வேலைநிறுத்தம் காரணமாக ரூ. 50 கோடியும், நிலக்கரிவெட்டி எடுக்கப்படதாததால் ரூ. 200 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழக மின் தேவையை சமாளிப்பதற்காக கேரளம் மற்றும் மகாராஷடிர மாநிலங்களின் தலா 100மெகாவாட் மின்சாரம் தந்து உதவுமாறு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இதை இரு மாநிலஅரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ளதாக மின்வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X