இந்திய கைதிகளை விடுவிக்க வங்கதேச கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டாக்கா:

டாக்கா மத்தியச் சிறைச்சாலையில் தண்டனை பெற்ற 29 வெளிநாட்டுக் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறுவங்காளதேச உள்துறை அமைச்சகத்திற்கு அந்நாட்டு கோர்ட் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

இக்கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் இந்தியா மற்றும் மியான்மர் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

தண்டனை காலம் முடிந்த பிறகும் அக்கைதிகளை சிறையிலேயே வைத்திருந்ததால், இத்தகைய உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தூதரகங்கள் இக்கைதிகளின் விடுதலை குறித்து அதிக அக்கறை காட்டாமல் இருந்ததால், அவர்கள்சிறையிலேயே வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்தியத் தூதரக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இக்கைதிகளின் மேல் ஆதாரமில்லாதகுற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற புகார்கள் வரும்போது உடனடியாக நாங்கள் நடவடிக்கைஎடுத்திருக்கிறோம் என்றார் அந்த அதிகாரி.

அந்தந்த தூதரகங்கள் மூலமாகக் கைதிகளை அவர்களுடைய நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றுஉள்துறை அமைச்சகத்தை அந்தக் கோர்ட் கேட்டுக் கொண்டது. அதுவரை, உள்துறை அமைச்சகத்தின்பாதுகாப்பிலேயே அந்த 29 கைதிகளையும் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

சம்பந்தப்பட்ட தூதரகங்களிடமிருந்து தகவல் எதுவும் வரவில்லை என்றால், அரசே முன் வந்து, தண்டனை முடிந்தஒரு மாதத்திற்குள் அக்கைதிகளை அவர்களுடைய நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோர்ட்உத்தரவிட்டது.

வங்காளதேச சிறைச்சாலையில் 142 இந்தியர்கள் உள்பட 851க்கும் மேற்பட்ட வெளிநாட்டுக் கைதிகள்இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தண்டனைக் காலம் முடிந்து விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+