For Daily Alerts
Just In
இந்தியக் கடலில் மீன்பிடித்த பாக். மீனவர்கள் கைது
ராஜ்கோட்:
ஜாம்நகர் மாவட்டம் ஓஹா கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 27 பாகிஸ்தான்மீனவர்களை இந்தியக் கடற்கரை வீரர்கள் கைது செய்தனர்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், இந்தியக் கடலில் யாருக்கும் தெரியாமல் மீன் பிடித்துக் கொண்டிருந்தபாகிஸ்தான் மீனவர்களை அடையாளம் கண்டுபிடித்து கடற்படை வீரர்கள் கைது செய்து எங்களிடம்ஒப்படைத்தனர்.
அவர்கள் வந்த படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது மேற்கொண்டு விசாரணை நடத்திவருகிறோம் என்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]