பிச்சையெடுத்துப் படித்த மாணவிக்கு ஜெ. 1 லட்சம் உதவி
டெல்லி:
பிச்சையெடுத்த பணத்தைக் கொண்டே 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மைசூரைச் சேர்ந்ததமிழ் மாணவி நாகரத்னாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.1 லட்சம் வழங்கினார்.
தான் ஒரு போலீஸ் அதிகாரியாக வர ஆசைப்படுவதாக அந்த மாணவி கூறியதும்,அதுவரை படிப்பதற்குத் தேவையான உதவிகளை அளிப்பதாகவும் ஜெயலலிதா உறுதிஅளித்தார்.
நிரந்தர வைப்புத் தொகையில் அந்தப் பணம் போடப்படுவதாகவும் அதிலிருந்து வரும்வட்டித் தொகையைப் படிப்புச் செலவுக்குப் பயன்படுத்திக் கொள்ளும்படியும்அம்மாணவியிடம் கூறினார் ஜெயலலிதா.
இதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பு மக்களும் நாகரத்னாவுக்கு உதவி செய்யமுன்வந்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன், நடிகை சரோஜாதேவி ஆகியோரும் இந்தமாணவிக்கு பண உதவி செய்துள்ளனர்.
மைசூரில் உள்ள ஏதாவது ஒரு வங்கியில் தான் ஒரு கணக்கை ஆரம்பித்து, அதில் இந்தமாணவியின் கல்விச் செலவுக்காகப் பணத்தைப் போட இருப்பதாக வெளிநாட்டில்வசிக்கும் இந்தியர் ஒருவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, இவ்வளவு நாளும் பிச்சையெடுத்துப் படித்துக் கொண்டிருந்தநாகரத்னா, தற்போது பணமழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.
குடிகார அப்பாவிற்கும் பார்வை இழந்த அம்மாவிற்கும் இடையே தவித்துக்கொண்டிருந்த இம்மாணவியின் சொந்த ஊர் தமிழ்நாட்டின் திண்டுக்கல் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications