ஸ்ரீவில்லிபுத்தூரில் காலராவுக்கு 8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் காலரா நோய் காரணமாக கடந்த 2 வாரங்களில் 8 பேர் வரை பலியாகியுள்ளனர்.
காலரா நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வந்து கொண்டேஇருக்கின்றனர்.
ரசாயனக் கற்களால் பழுக்க வைக்கப்படும் பழங்களின் மூலமாகவோ, குடிநீர் மூலமாகவோ காலரா நோய்பரவவில்லை என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் காலரா பரவும் காரணத்தைக் கண்டுபிடிக்கமுடியாமல் அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
காலரா நோய் காரணமாக, இதுவரை 159 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அங்கு முகாமிட்டுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குநர் விட்டல்ராஜ்கூறினார்.












Click it and Unblock the Notifications