மூப்பனாரைச் சந்தித்தார் ப.சண்முகம்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகம் வெள்ளிக்கிழமை சந்தித்துஅமைச்சரவை விரிவாக்கம் குறித்துப் பேசினார்.
பாண்டிச்சேரி முதல்வராக ப.சண்முகம் வியாழக்கிழமை பதவியேற்றார். ஆனால் அவருடன் அமைச்சர்கள்யாரும் பதவியேற்கவில்லை. அதுகுறித்து சோனியா காந்தி அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகம் வெள்ளிக்கிழமை சென்னைக்கு வந்து, தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் மூப்பனாரை சந்தித்தார். அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்படவுள்ள அமைச்சர்கள் குறித்துஅவர் மூப்பனாருடன் விவாதித்ததாகத் தெரிகிறது. த.மா.கா சார்பில் அமைச்சர் பதவிக்கு பரிந்துரைசெய்யப்படவுள்ளவர்கள் யார் என்பது குறித்தும் அவர் மூப்பனாருடன் பேசினார்.
பின்னர் வெளியே காத்திருந்தசெய்தியாளர்களிடம் சண்முகம் பேசுகையில், அமைச்சர்கள் யார் என்பதைசோனியா காந்திதான் தெரிவிப்பார். இதுகுறித்து பேசுவதற்காக வெள்ளிக்கிழமை மாலை டெல்லி செல்கிறேன்.அதன் பிறகு அமைச்சர்கள் யார் என்பது அறிவிக்கப்படும்.
இடைத் தேர்தலில் நின்று நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியைத்தருவேன் என்றார்.