போலி சான்றிதழ்: உதவி தலைமை ஆசிரியர்-மாணவர் கைது
சேலம்:
போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பிளஸ் டூ தேர்வு எழுதி, கல்லூரியில் சேர்ந்து படித்த மாணவரையும்,சான்றிதழ் பெற உதவிய தலைமை ஆசிரியரையும் போலீசார் கைது செய்தனர்.
சேலம் அருகே அம்மாபேட்டையைச் சேர்ந்த மாசிலாமணி என்பவரது மகன் ஞானதேசிகன் (22). இவர் தனியார்டியூசன் சென்டரில் படித்து வந்தார். 10ம் வகுப்பில் 239 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார்.
எனவே, அதிக மதிப்பெண் பெற வேண்டும் என வேண்டி அயோத்திப்பட்டினத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிதலைமை ஆசிரியர் ராமசாமி (60) என்பவரை அணுகினார்.
ராமசாமி, ஞானதேசிகனிடம் ரூ. 8 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு 271 மதிப்பெண்கள் கொண்ட மதிப்பெண்சான்றிதழைக் கொடுத்தார்.
இந்தச் சான்றிதழைப் பெற்று பிளஸ் டூ வில் சேர்ந்தார் ஞானதேசிகன். பின்னர், அவர் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றுசேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ வில் சேர்ந்தார். அங்கு தற்போது முதலாமண்டு படித்துவருகிறார்.
இந்த நிலையில், தேர்வு எழுதிய மாணவர்களின் சான்றிதழை அதிகாரிகள் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் ஞானதேசிகனின் சான்றிதழ் போலி எனக் கண்டறிந்தனர்.
பின்னர் இது குறித்து சேலம் நகரப் போலீசில் புகார் செய்தனர். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியர் ராமசாமி ஓய்வு பெற்றார். இவரையும் தற்போதுகல்லூரியில் படித்து வந்த மாணவன் ஞானதேசிகனையும் போலீசார் கைது செய்தனர்.
தலைமை ஆசிரியராக இருந்த ராமசாமி, இந்த போலிச் சான்றிதழை சென்னையில் உள்ள வேறு ஒரு பள்ளியில்பெற்றது தெரிய வந்தது. இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications