கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை விமான நிலையத்திற்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து விமான நிலையத்தில்பரபரப்பு ஏற்பட்டது.
கோவை விமான நிலைய அதிகாரிக்கு சனிக்கிழமை காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியநபர், இன்று பகல் சரியாக 12 மணிக்கு விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் எனக் கூறி விட்டு போன்இணைப்பைத் துண்டித்து விட்டார்.
இதையடுத்து, தொலைபேசி அழைப்பு பற்றி போலீஸ் அதிகாரிகளுக்குத் விமான நிலைய அதிகாரி தகவல்கொடுத்தார்.
மோப்ப நாய்களுடன் விமான நிலையம் சென்ற போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டுஎதுவும் கிடைக்கவில்லை. குண்டு புரளியை கிளப்பிய மர்ம ஆசாமியைப் போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications