மாவட்டங்களுக்கு மீண்டும் ஜாதித் தலைவர்கள் பெயர்களா?: ஜெ. மறுப்பு
சென்னை:
மாவட்டங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றிற்கு ஜாதித் தலைவர்களுடைய பெயரை மீண்டும்சூட்ட அதிமுக அரசு முடிவு செய்துள்ளது என்ற செய்தியை தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா மறுத்துள்ளாார்.
இதுகுறித்து சட்டசபையில் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:
மாவட்டங்கள் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஜாதித் தலைவர்கள் பெயரைச் சூட்ட அதிமுக அரசுமுடிவு செய்துள்ளது என்று செய்தித்தாள்களில் செய்திகள் வந்திருந்தன. இச்செய்திகள் தவறானவை. இதுகுறித்துஇன்னும் எந்த ஒரு முடிவுக்கும் அரசு வரவில்லை என்றார் ஜெயலலிதா.
திமுக ஆட்சிக்காலத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் தலைவர்களது பெயர்கள் நீக்கப்பட்டன.இருப்பினும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அந்த முடிவை அப்போது எதிர்த்தார். அதிமுக மீண்டும்ஆட்சிக்கு வந்தால் தலைவர்களுடைய பெயர்கள் மீண்டும் சூட்டப்படும் என்றார்.
அதற்கேற்றார்போல, தற்போது தலைவர்களுடைய பெயர்களை மீண்டும் சூட்ட அதிமுக அரசு முடிவுசெய்துள்ளதாகவும், இதுகுறித்த முடிவை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்றும் மாநில சட்ட அமைச்சர்தம்பித்துரை கூறியதாக திங்கள்கிழமை காலையில் செய்திகள் வந்திருந்தன.
ஆனால், இதை ஜெயலலிதா சட்டசபையில் திட்டவட்டமாக மறுத்தார்.












Click it and Unblock the Notifications