For Daily Alerts
Just In
சேலம்: லாரிகள் மோதலில் 3 பேர் சாவு
சேலம்:
சங்ககிரி அருகே 2 லாரிகள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
சம்பவத்தன்று சங்ககிரியிலிருந்து சேலத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி வைகுந்தம் அருகில்சென்று கொண்டிருந்தபோது எதிரே ஒரு லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இவை இரண்டும் நேருக்கு நேர்மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் ஒரு லாரியில் பயணம் செய்த சங்கராபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம் (32), உதவிடிரைவர் சின்னையன் (27), ஆகியோர் இறந்தனர். கிளீனர் முருகன் படுகாயத்துடன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
மேலும், மற்றொரு லாரியில் பயணம் செய்த ஒருவரும் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Story first published: Monday, May 28, 2001, 5:30 [IST]