செயல்படாத 90 உழவர் சந்தைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட 100 உழவர் சந்தைகளில் 10மட்டுமே செயல்படுகின்றன என்று தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா திங்கள்கிழமைகூறினார்.

இதுகுறித்து அவர் சட்டசபையில் கூறியதாவது:

உழவர் சந்தைகள் அனைத்தையும் நாங்கள் மூடப்போவதாக திமுகவினர் தவறானசெய்திகளைப் பரப்பி வருகின்றனர். செயல்படாத சந்தைகளைத் தான்மூடப்போகிறோம்.3 நாட்களாக உழவர் சந்தைகளை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலங்கள்,போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருவதாகச் செய்திகள் வருகின்றன.

ஆனால் இப்போராட்டங்களில் விவசாயிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.திமுகவினர்தான் இவற்றில் கலந்து கொண்டனர் என்று எனக்குச் செய்தி கிடைத்துள்ளது.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உழவர் சந்தைகளில், 10 மட்டுமே தற்போதுசெயல்பட்டு வருகின்றன. செயல்படாத உழவர் சந்தைகள் மட்டுமே மூடப்படும் என்றுஆளுநர் உரையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்று ஜெயலலிதா கூறினார்.

உண்மை நிலை என்ன?

உழவர் சந்தைகள் ஆரம்பிக்கப்பட்டபோது விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும்மிகப் பெரிய வரப் பிரசாதமாய் அமைந்திருந்தது. ஆனால், இப்போது நிலைமைமெதுவாக மாறி வருகிறது.

மதுரை போன்ற நகரங்களில் உழவர்கள் என்ற பெயரில் பெரிய காய்கறிவியாபாரிகள் உழவர் சந்தை கடைகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் பல பெரிய காய்கறிவியாபாரிகள் உழவர் சந்தையிலும் ஒரு பிராஞ்சை தொடங்கிவிட்டனர். இவர்களுக்குபண பலமும், கட்சிகள் பின் பலமும் இருப்பது அதிகாரிகளின் கைகளை கட்டிப்போடுகிறது.

மேலும் பலர் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் வாங்கி வந்து உழவர் சந்தைகளில்விற்க ஆரம்பித்துள்ளனர். இங்கு உழவர்களோடு சேர்த்து பொது மக்களையும் இந்தவியாபாரிகள் ஏமாற்றி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+