ஜான் பாண்டியன் ஜாமீனில் விடுதலை
சென்னை:
தேர்தல் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் சென்னைக்கு வரக்கூடாது. செங்கல்பட்டில்தான் தங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சென்னை எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் ஜான் பாண்டியன்.இவரை எதிர்த்து போட்டியிட்டு திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி வெற்றி பெற்றார்.
தேர்தல் நாளன்று ஜான் பாண்டியன் மற்றும் பரிதி இளம்வழுதியின் ஆட்களிடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து இருவருமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜான் பாண்டியனும், அவரதுஆட்கள் 48 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து ஜான் பாண்டியனும் அவரது ஆட்களும் சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தனர். இதில் ஜான் பாண்டியன் தவிர அவரது ஆட்கள் 48 பேர் விடுவிக்கப்பட்டனர். பின்னர் ஜான்பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி மலை.சுப்ரமணியம் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மலை.சுப்ரமணியம் தனது தீர்ப்பில் கூறியதாவது:
ஜான் பாண்டியன் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 வழக்குகளில் 2 வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஜான் பாண்டியன் சென்னை நகருக்குள் வரக் கூடாது.
ஜான் பாண்டியனும், பரிதி இளம்வழுதியும் ஒரே ஊரில் இருக்கக் கூடாது என்பதால்தான் இந்த உத்தரவு. வழக்குவிசாரணையின்போது மட்டுமே ஜான் பாண்டியன் சென்னைக்கு வர வேண்டும்.
இவர் ரூ 10 ஆயிரத்துக்கு சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனும் வழங்கி ஜாமீன் பெறலாம்.அவர் செங்கல்பட்டில்தான் தங்கியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நீதிபதி.












Click it and Unblock the Notifications