பாக்.தூதரகத்தில் கூடுதல் பாதுகாப்பு இல்லை
டெல்லி:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் இந்தியா வருவதையொட்டி டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில்கூடுதல் பாதுகாப்பு போடும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரக செயல்பாடுகளையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்போலீஸார் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
காஷ்மீர் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தைநடத்துவதற்காக ஜூலை மாதம் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் இந்தியா வருகிறார்.
இதுகுறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ஆர்.எஸ்.கிருஷ்ணய்யா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,முஷாரப் எப்போது வருவார் என்று திட்டவட்டமாக அறிவித்தபின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நாங்கள்பரிசீலனை செய்வோம்.
இதுவரை சமூகவிரோதிகளிடமிருந்து முஷாரப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல்கள் எதுவும் வரவில்லைஎன்றார்.
இருப்பினும் பிற போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், ஜூன் மாத இறுதியிலோ அல்லது ஜூலை மாததொடக்கத்திலோ முஷாரப் இந்தியா வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முஷாரப் வருவதற்கு முன்போ அல்லது அவர் வரும்போதே டெல்லியில் அவரது வருகையைக் கண்டித்துபோராட்டங்கள், ஊர்வலங்கள் நடக்கலாம் என்று தெரிகிறது என்று கூறினர்.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை டெல்லியில் சிவசேனை ஆதரவாளர்கள் முஷாரப்பின் கொடும்பாவியைஎரித்தனர். இருப்பினும் சிவசேனை கட்சி பிரமுகர்கள் போராட்டத்தைப் போலீஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
டெல்லியிலுள்ள சாங்கியாபுரி பகுதியில் பாகிஸ்தான் தூதரகம் அமைந்துள்ளது. அங்கு பாதுகாப்பு கடுமையாகஉள்ளது. இன்னும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்தப் பகுதியில் தர்ணா நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டெல்லியின் புறநகர்ப்பகுதிகளில்போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1987 ம் ஆண்டுக்குப்பிறகு பாகிஸ்தான் ஆட்சியாளர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications