எங்களையும் வாழவிடுங்கள்..
சென்னை:
விலங்குகள் உரிமைக் கழகத்தினர் தொடர்ந்து விலங்குகளை பாதுகாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். விலங்குகளை நேசியுங்கள் கொல்லாதீர்கள். அவைகளையும் வாழவிடுங்கள் என்பதுதான்அவர்கள் கோரிக்கை.
விலங்குகளுக்கு உதவுவதற்கு வனத்துறை அதிகாரிகளும், விலங்கு உரிமை அமைப்பின் தொண்டர்கள்விலங்குகளை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
விலங்குகளை பிடிக்க வேண்டுமானால் நகராட்சி அலுவலர்களையோ அல்லது தங்களையோ தொடர்புகொள்ளுமாறு விலங்கள் உரிமை அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆனால் பல விலங்குகளும் பொதுமக்களின் கொடுமைக்கு உள்ளாகி இறந்து விடுகின்றன.
நரிக்குறவர்களும், நாடோடி இனத்தவரும் பறவைகளை வேட்டையாடி கொன்று வருகின்றனர். காக்கைகள்இவர்களின் பார்வையிலிருந்து தப்புவதில்லை. காக்கைகள் இவர்களால் அதிக அளவில்வேட்டையாடப்படுகின்றன.
சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் அரசு விலங்குகள் மருத்துவமனையில் விலங்குகளுக்கு தேவையானநவீன சிகிச்சையும் குறைந்த செலவில் செய்யப்படுகிறது
விஷ முறிவு தயாரிப்பு மையமான கிங் இன்ஸ்ட்டியூட்டில் இருந்த குதிரைகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இறந்துவந்தன. 6 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக அங்கிருந்த குதிரைகள் காப்பாற்றப்பட்டுதற்போது பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் சர்வதேச விமான நிலையத்தில் 365 நட்சத்திர ஆமைகளை கடத்தும் முயற்சியும் முறியடிக்கப்பட்டுஅவை காப்பாற்றப்பட்டன.
தேனி மாவட்டத்தில் நடக்கும் கோவில் திருவிழாவுக்கு காட்சி பொருளாக கொண்டு செல்லப்பட இருந்த 2 பெண்சிங்கங்கள், 1 கரடி, 3 நரிகள், 1 நாரை, 2 முள்ளம் பன்றிகள், 3 முதலைகள், குரங்குகள், ஆமை, 1 மயில்ஆகியவற்றை காப்பாற்றினர்.
இந்த மிருகங்களை வளர்த்து வந்தவர் அவற்றை 10 வருடங்களுக்கும் மேலாக சிறு கூண்டில் அடைத்துவைத்திருந்திருக்கிறார். சிறு கூண்டில் அடைக்கப்பட்டிருந்ததால் அந்த மிருகங்களால் நடக்கக்கூட முடியவில்லை.அவை தற்போது மிருகக் காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பல விதத்திலும் விலங்குகளை காப்பாற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதால் பல விலங்குகளும் தப்பி உயிர்வாழ்ந்து வருகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications