For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமாகா கவுன்சிலரை அடித்த திமுக கவுன்சிலர்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக, தமாகா கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டது.

கோவை மாநகராட்சி கூட்டம் வியாழக்கிழமை மாலையில் நடந்தது. இக் கூட்டத்திற்கு மேயர் கோபாலகிருஷ்ணன்தலைமை வகித்தார். கமிஷனர் மக்வானா முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் தீண்டாமை உறுதிமொழிவாசிக்கப்பட்டது.

உறுதிமொழிக்குப்பின் அதிமுக கவுன்சிலர் தாமரைச் செல்வி, மேயரிடம் புதிதாக அரசு பதவி ஏற்றுள்ளது அதற்குவாழ்த்துத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனக் கூறினார். இதற்கு தமாகா, காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆதரவுதெரிவித்தனர்.

திமுக கவுன்சிலர்கள் கோவை தெற்கு மண்டல அலுவலகம், பயணியர் விடுதிக்கு மாற்றப்பட்டது குறித்துகவுன்சிலர்களிடம் தெரிவிக்கவில்லை. இது கவுன்சிலர்களுக்கு உரிமைப் பறிப்பு விஷயம். இதற்கு முதலில்பதிலளித்து விட்டு வாழ்த்துத் தீர்மானம் கொண்டு வாருங்கள் எனக் கூறினர்.

ஆனால், அதிமுக கூட்டணிக் கவுன்சிலர்கள் முதலில் நாங்கள் சொன்னது தான் நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி மேயரை முற்றுகையிட்டனர். அவர்களைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர்களும் மேயரிடம் வந்தனர்.அப்போது இருதரப்பினரிடையேயும் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பில் முடிந்தது.

பின்னர் கவுன்சிலர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். அப்போது திமுக கவுன்சிலர் நாராயணசாமி, தமாகாகவுன்சிலர் பொன் ஆனந்தகுமாரிடம் வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை பளார் என அறைந்தார்.இதையடுத்து கூட்டததில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட ரகளைக்குப் பிறகு கூட்டத்தை ஒத்தி வைத்துமேயர் உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X