போலி டீத்தூள் தயாரித்த கும்பல் கைது
ஈரோடு:
போலி கலப்படத் தேயிலைத் தூள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள டீத்தூள்கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 3 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், மணியம் பாளையத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (40). இவரது தோட்டத்தில் போலி தேயிலைதொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். இதற்கான மின்சாரத்தை அருகில் இருந்த மின் கம்பத்திலிருந்து திருட்டுத்தனமாக எடுத்துள்ளார்.
இந்த போலி தேயிலைத் தொழிற்சாலையில், தேயிலை பாக்கெட்டுகளை போலியாகத் தயாரித்து, பெங்களூர்,ஹைதராபாத், டெல்லி வரை விற்பனை செய்து வந்துள்ளார்.
போலி தேயிலைத் தூள் தயாரிக்க களிமண், முந்திரித் தோல், சோடா உப்பு ஆகியவற்றை இவர் பெருமளவில்குடோனில் சேமித்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த குடோனில் 133 மூடை கச்சா பொருட்களை போலீசார் கைப்பற்றினர். மேலும், கலப்படம் செய்யப்பட்டதேயிலைத் தூள் 44 மூட்டைகள் வேனில் ஏற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இதனை போலீசார் கைப்பற்றி டிரைவர் குருசாமி (35) மற்றும் கிளீனர் மாதேஸ்வரன் ஆகியோரைக் கைதுசெய்தனர். தொழிற்சாலை நடத்திய தேவேந்திரனையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.












Click it and Unblock the Notifications