மத்திய அரசிடம் நிதியுதவி கோருகிறது நாஸ்காம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை வேகமான வளர்ச்சி காணவும், தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்மேற்கொள்ளும் வகையிலும் 100 மில்லியன் டாலர் வெஞ்சர் கேபிடல் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் நாஸ்காம்கோரியுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளில் பிராண்ட் நேம் கிடைக்கச் செய்யமத்திய அரசு ரூ 200 மில்லியன் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் நாஸ்கோம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாஸ்கோம் தமிழக அரசின் உதவியுடன் சென்னையில், ஐடி சர்வீஸஸ் 2001 என்ற இரண்டு நாட்கள் கருத்தரங்கைநடத்தியது.

கருத்தரங்கில் கலந்து கொண்டு நாஸ்கோம் ஒருங்கிணைப்பாளர் அருண் சேத் பேசுகையில், இந்த கருத்தரங்குநடத்துவதன் நோக்கமே 2008 ம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு மில்லியன் பேருக்குவேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுதான்.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப மையங்கள் மூலம் அடுத்த 12 மாதங்களுக்குள் 500 மில்லியன் டாலர்கள் லாபம்ஈட்டுவோம்.

இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப மையங்கள் செய்யும் சேவைகள் குறித்து அடுத்த 6 மாதங்களில்அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளோம் என்றார்.

இந்தக் கருத்தரங்கில் தரக் கட்டுப்பாட்டின் (குவாலிட்டி கன்ட்ரோல்) முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ரூ 51.3 பில்லியனில் ஐ.டி.ஆராய்ச்சி மையம்:

இதற்கிடையே, மகாராஷ்டிரத்தில் மும்பை-புனே அருகே தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ51.3 பில்லியன் ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில், அமெரிக்காவின்மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட்டும் (எம்.ஐ.டி), மத்திய அரசும் இணைந்து தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தைஉருவாக்கவுள்ளன.

இதற்காக மீடியா லேப் ஏசியா 80 சதவீதம் நிதியுதவி அளிக்கவுள்ளது. மீதி தொகையை மத்திய அரசு அளிக்கிறது.

இதுகுறித்து வியாழக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்ற விவகாரத்துறைமற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் கூறுகையில், இந்த ஆராய்ச்சி மையம்தொடங்குவதற்கு மீடியா லேப், முதல் ஒரு வருடத்துக்கு ரூ. 650 மில்லியன் நிதியுதவி அளிக்கிறது.

பின்னர் அடுத்தகட்டமாக அடுத்த 10 வருடத்துக்குள் மீடியா லேப்பும், மத்திய அரசும் சேர்ந்து 51.3 பில்லியனில்தகவல் தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்தை விரிவாக்கும் முயற்சிகளில் ஈடுபட உள்ளோம். இந்த ஆராய்ச்சிமையத்தை மும்பை-பூனா தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஆராய்ச்சி மையத்தால் இந்தியாவில் உள்ள பல பொறியியல் வல்லுனர்கள் பயனடைவார்கள் என்றார்பிரமோத் மகாஜன்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+