தந்தையை மிரட்டிய போலீஸ்காரர் கைது
கோவை:
தந்தையை மிரட்டிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
கோவை பூ மார்க்கெட் மகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ் (63). இவரது மகன் நரேந்திரராஜ்(35). இவர் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் முதல் நிலைக் காவலராக இருந்தார்.
டிரைவராகப் பணியாற்ற இவர் குடிபோதையில் இருந்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். இந்தநிலையில், நரேந்திர ராஜ் கே.கே புதூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்தார்.
அங்கு சொத்தைப் பிரித்து தர வேண்டும் என மிரட்டியுள்ளார். ஆனால், அவரது தந்தை மறுக்கவே ஆத்திரம்அடைந்து டி.வி பொருட்களை அடித்து நொறுக்கினார். மேலும் தந்தையைக் கொலை செய்து விடுவேன் எனமிரட்டியுள்ளார்.
இது குறித்து தேவராஜ் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொண்டனர். இதன் அடிப்படையில் சஸ்பெண்டில் இருந்த போலீஸ் நரேந்திராஜை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications