தபால் கட்டணமும் உயர்வு
டெல்லி:
தபால் கட்டணங்கள் வெள்ளிக்கிழமை முதல் உயருகிறது.
தபால் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விலைஉயர்வு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
இந்த விலை உயர்வின்படி தபால்கார்டு 25 பைசாவிலிருந்து 50 பைசாவுக்கு உயர்த்தப்படுகிறது. அச்சிடப்பட்டதபால் கார்டின் விலை ரூ 3. போட்டிக்கான தபால் கார்டின் விலை ரூ 4லிருந்து ரூ 5 ஆக உயர்த்தப்படுகிறது.
20 கிராமிற்கு குறைவான எடையுள்ள கடிதங்களுக்கான கட்டணம் ரூ 4. மேலும் 20 கிராமிற்கு மேல் எடையுள்ளகடிதங்களுக்கான கட்டணம் ஒவ்வொரு 20 கிராமிற்கும் ரூ 1 விகிதத்தில் அதிகரிக்கப்படுகிறது.
500 கிராம் எடைக்குள் உள்ள பார்சல் கட்டணங்கள் ரூ 16. பதிவு தபால் கட்டணம் ரூ 17 ஆக இருக்கும்.அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான பதிவுக்கட்டண சலுகை ரூ 200.
அக்னாலட்ஜ்மென்ட் டெலிவரி கட்டணம் ரூ3 ஆக உயருகிறது.












Click it and Unblock the Notifications