காண்ட்ராக்டரிடம் கமிஷன்: ஸ்டாலின் மீது நடவடிக்கை
சென்னை:
சாலை காண்ட்ராக்டில் கமிஷன் பெற்றதாகக் கூறப்பட்ட சென்னை மேயர் ஸ்டாலின் மீது சட்டப்படி, நடவடிக்கைஎடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வியாழக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சாலை கான்டிராக்டில்கமிஷன் பெற்றதாக காண்ட்ராக்டர் தெய்வசிகாமணி கொடுத்த புகாரில் இதுவரை திமுக முன்னாள்எம்.பி.பரசுராமன் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் சென்னை மேயர் ஸ்டாலினுக்கு தொடர்பிருக்கிறதா என்று எதுவும் தெரியாது. அவர் கமிஷன் பெற்றிருந்தால்அவர் மீது சட்டப்படி, நடவடிக்கை எடுக்கப்படும்.
எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், பரிதி இளம்வழுதி, முன்னாள் எம்.பி.பரசுராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டதுபழிவாங்கும் நோக்கத்துக்காக அல்ல. பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் மேல் கொடுத்த புகாரின்அடிப்படையில்தான் இது நடந்தது.
சென்னையில் ரவுடியிசமும், கட்டப்பஞ்சாயத்தும் ஒழிக்கப்படும். முன்னாள் முதல்வர் கருணாநிதியின்பிறந்தநாளுக்கு பனகல் பூங்காவில் இடம் அளிக்கப்படவில்லை. இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை.
ரவிச்சந்திரன் என்ற வக்கீல் பனகல் பூங்காவில் பொதுக்கூட்டமோ, விழாவோ நடத்துவதற்கு அரசு தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு தற்போது விசாரணையில்உள்ளது.
அதனால்தான் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கலைவாணர் அரங்கிலும் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கப்படாதது குறித்து எனக்குஎதுவும் தெரியாது என்றார் முத்துக்கருப்பன்.












Click it and Unblock the Notifications