தமிழகத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகள்
சென்னை:
இந்தியாவில் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 5வதுஇடத்தில் உள்ளது என்பது வேதனையளிக்கும், அதிர்ச்சியான உண்மை. ஆண்டுதோறும் தமிழகத்தில் 11,000 பேர் தற்கொலை செய்து கொள்கிறாார்கள்.
மே-ஜுன் மாதங்களில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனவர்களின்எண்ணிக்கை அச்சுறுத்தும் வித்தில் உயர்ந்துள்ளது
மே-ஜுன் மாதங்களில் 10ம் வகுப்பு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி வரும். இந்தசமயத்தில் தேர்வில் தோல்வியடையவர்கள் வருத்தத்தில் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதன் காரணமாக மே-ஜுன் மாதங்களில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இளைஞர்களை தற்கொலை செய்து கொள்வதிலிருந்து தடுக்கும் விதமாக பல தொண்டுநிறுவனங்களும் அவர்களுக்கு ஆலோசனை, அறிவுரை, ஆறுதல் கூறி அவர்கள்தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்த முயன்று வருகின்றன.
இது குறித்து சென்னையில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான ஸ்நேகா வின்இயக்குனர் ராம் கூறுகையில், உலகம் முழுவதிலும் வருடந்தோறும் 10 லட்சம் பேர்தற்கொலை செய்து கொள்கின்றனர். 1 லட்சம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
தமிழகத்தில் மட்டும் 11,000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இவர்களில்5,000 பேர் மாணவர்கள்.
சென்னையில் மட்டும் 1,100 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதுஅச்சுறுத்தும் உண்மை.












Click it and Unblock the Notifications