ரயில் பயணிகள் கட்டணம் உயர்வு
Subscribe to Oneindia Tamil
சித்தரஞ்சன் (மேற்கு வங்கம்):
விரைவில் ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படும் என மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் திக்விஜய் சிங்கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சனில் அதிவேக மின்சார ரயில் இஞ்ஜின் தயாரிப்பு விழாவில் பங்கேற்ற பின் திக்விஜய் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. இதனால்திட்டப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ரயில்வே நவீனமயமாக்கல் திட்டப்பணிக்கு ரூ 5,000 கோடி தேவைப்படுகிறது. நிதி தேவையை சமாளிக்கபயணிகள் கட்டணம் உயர்த்தப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
பயணிகளை பெருமளவில் பாதிக்காத வகையில் குறைந்த பட்சமாக 10 சதவிகிதம் கட்டணம் உயர்த்தப்படும்என்றார்.












Click it and Unblock the Notifications