ஜூன் 10 ல் ஐபிஎம் நுழைவுத்தேர்வு
கொல்கத்தா:
ஐபிஎம் நிறுவனத்தார் நடத்தும், சாப்ட்வேர் வல்லுநர்கள் பயிற்சி மற்றும் சாப்ட்வேர் டெவலப்மென்ட்பயிற்சிகளுக்கான நுழைவுத்தேர்வு (என்.ஈ.டி) ஜூன் 10 ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து ஐபிஎம் அட்வான்ஸ்டு கேரியர் எஜூகேஷன் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐபிஎம் நடத்தும்என்ஜினியரிங் பயிற்சிக்கான தேசிய நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் 10 ம் தேதி நடக்கிறது. இந்தியா முழுவதும் 100நுழைவுத்தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெற உள்ளது.
ஜூன் 18 ம் தேதி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பின்னர் பயிற்சி வகுப்புக்கள் ஜூலை 2 ம் தேதிமுதல் ஆரம்பமாகும்.
நுழைத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 8 மாதங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளஅனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும்.
மாணவர்களுக்கு ஜாவா, வெப்-புரோக்கிராமிங் மற்றும் ஒராக்கிள் ஆகியவை குறித்தான பயிற்சிகள்அளிக்கப்படும்.
ஐபிஎம் நடத்தும் அட்வான்ஸ்டு சர்டிபிகேட் கோர்ஸ் (ஏசிஎஸ்ஈ) மூலம் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புபெற்றவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.
பயிற்சி முடிவில் மாணவர்களுக்கு ஐபிம் சான்றிதழ்களை வழங்கவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புக்கள்மாணவர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.