For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை அண்ணாநகரில் 100 ரூபாய் கள்ள நோட்டுக்களை வைத்திருந்த சிவகாசியைச் சேர்ந்த லட்சுமணனைசி.பி.சி.ஐ.டி. போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

இந்தக் கள்ள நோட்டுக்கள் அனைத்தும் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டவை என்று விசாரணையில்தெரிய வந்தது.

கேரளாவிலிருந்து கள்ளநோட்டுக்களை வாங்கி வந்து, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள ஓட்டல்கள்மற்றும் பிராந்தி கடைகளில் புழக்கத்தில் விட்டு வந்தார் லட்சுமணன்.

இது தொடர்பாக, மதுரை சி.பி.சி.ஐ.டி.யைச் சேர்ந்த கள்ளநோட்டுத் தடுப்பு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.உடனடியாக அவர்கள் செயல்பட்டு, மதுரை மாநகர் முழுவதும் கடந்த 2 நாட்களாகத் தீவிர சோதனை நடத்தினர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை, அண்ணாநகரில் உள்ள சுகுணா ஸ்டோர் பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக வந்து கொண்டிருந்த லட்சுமணனைப் போலீஸார் விசாரித்ததில், அவரிடம்ஒரு 100 ரூபாய் கள்ளநோட்டு இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில், அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ரூ.78 ஆயிரம் மதிப்புள்ள 100 ரூபாய்கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

லட்சுமணனும் உடனே கைது செய்யப்பட்டு, மதுரை முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னர்தான் மேலூரில் கள்ளநோட்டுக் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களும் கேரளாவிலிருந்துதான் கள்ளநோட்டுக்களை வாங்கி வந்து புழக்கத்தில் விட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X