திமுக கூட்டணியிலிருந்து புதிய நீதிக் கட்சி விலகல்
சென்னை:
திமுக கூட்டணியிலிருந்து புதிய நீதிக் கட்சி விலகி விட்டதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம்கூறினார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டு, உண்மையாகஉழைத்தோம். ஆனால் மக்களின் தீர்ப்போ எங்கள் கூட்டணிக்கு எதிராக அமைந்து விட்டது. தேர்தல் தோல்விக்குநாங்களும் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.
தேர்தலுக்காகத்தான் இந்தக் கூட்டணி அமைந்தது. அதனால், தேர்தல் முடிந்தவுடன் தார்மீகமாக விலகுவது போல்,தொண்டர்கள் கருத்துக்கிணங்க, திமுக கூட்டணியிலிருந்து புதிய நீதிக் கட்சியை விடுவித்துக் கொள்கிறோம்.
கட்சியைப் பலப்படுத்தி, மக்களைச் சந்தித்து நன்மதிப்பைப் பெறும் முயற்சியில் புதிய நீதிக் கட்சி செயல்படும்.
வரும் ஜூன் 9 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்டநடவடிக்கைகள் பற்றி விவாதித்து முடிவெடுக்க உள்ளோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் கருணாநிதிக்கும், கூட்டணியின் அனைத்துத் தலைவர்களுக்கும், உழைத்ததொண்டர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறியிருந்தார் சண்முகம்.












Click it and Unblock the Notifications