Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேபாள அரசர், குடும்பம் படுகொலை: இளவரசர் வெறிச்செயல்

Subscribe to Oneindia Tamil

காட்மாண்டு:

Berendra , Aishwaryaநேபாள அரசர் பீரேந்திரா, அரசி ஐஸ்வர்யா உள்பட ராஜ குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அரசரின் மகனாலேயேசுட்டுக் கொல்லப்பட்டனர்.

தனக்கு திருமணம் ஆகாத விரக்தியினால் இளவரசர் திபேந்திரா (30) இச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நடந்த அரச குடும்ப விருந்து நிகழ்ச்சியின் போது நடந்தது.

நேபாள அரண்மனையில் வெள்ளிக்கிழமை இரவு விருந்து நடந்தது. இந்த விருந்தில் அரச குடும்பத்துக்கு மிகவும்நெருக்கமான உறவினர்கள் கூடியிருந்தனர். அப்போது அரசரின் மகன் திபேந்திராவுக்கும், அரசருக்கும் இடையேதிபேந்திராவின் திருமண விஷயம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து ஆத்திரமடைந்த திபேந்திரா (30), அரசர் பீரேந்திரா (55), அரசி ஐஸ்வர்யா (52), அரசரின் சகோதரிகள் 2பேர் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டார்.

அரசர் உள்பட 7 பேர் இச்சம்பவத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் படுகாயமடைந்தனர். அரசரும், அரசியும் உடனடியாகஅருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவுஉயிரிழந்தனர்.

ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை அரச குடும்பத்தினர் அனைவரும் அரண்மனையில் கூடுவதுவழக்கம். அதே போல் ஜூன் 1 ம் தேதி இரவு அரச குடும்பத்தினர் விருந்துக்காகக் கூடிய போது இச்சம்பவம்நடந்தது.

இளவரசர் திபேந்திரா முதலில் தன் குடும்பத்தாரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு பின்னர் தன்னைத் தானேசுட்டுக் கொண்டார்.

அரசர் பீரேந்திரா உடம்பில் பாய்ந்த குண்டுகள் அனைத்தையும் வெளியே எடுத்த பின்பும் அவரைப் பிழைக்கவைக்கமுடியவில்லை என்று ராணுவ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

இளவரசர் திபேந்தரா சுட்டபோது, முதலில் காயமடைந்தவர் அரசரின் சகோதரி சாந்தி ராஜ்ய லட்சுமி சிங் (60).அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

திபேந்திராவின் திருமணம் தொடர்பாக நடந்த தகராறில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாகவும், இந்தச்சம்பவத்தின்போது அவர் குடித்திருந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்தச் சம்பவம் குறித்துஉறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இளவரசர் திபேந்திராவுக்கு திருமணம் ஆகாத காரணத்தால் அவர் மிகவும் மனச்சோர்வில் இருந்ததாகவும்,அதனால் அவர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தனது திருமணம் தள்ளிப்போவதைக் கண்டு இளவரசர் திபேந்திரா விரக்தியடைந்த நிலையில் இருந்ததால்அவர் தனது கட்டுப்பாட்டை இழந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக தன்னைத்தானே சுட்டுக் கொண்ட திபேந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்குஅங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து கோமாவில் உள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+