For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்தோஷத்தில் சாவை தழுவிய ப்ளஸ் டூ மாணவி

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

ப்ளஸ் டூ தேர்வில் தான் பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேர்வு பெற்றதை அறிந்த சிந்து (17) என்ற மாணவிசந்தோஷத்திலேயே ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி இறந்தார்.

கன்னியாகுமாரி மாவட்டம் செட்டியார்விளையைச் சேர்ந்த இந்த மாணவி, திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென்று சிந்துவுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. பல மருத்துவமனைகளில்சிகிச்சை அளித்த பிறகும், 40 பாட்டில் வரை ரத்தம் ஏற்றப்பட்ட பிறகும் அவர் உடல்நிலை தேறவில்லை.

மார்ச் மாதம் நடந்த ப்ளஸ் டூ தேர்வின்போது கூட அவர் கையில் கட்டுடன் வந்துதான் தேர்வு எழுதினார். அதைவிடகொடுமை என்னவென்றால், அவர் கடைசித் தேர்வு எழுதியபோது தன்னுடைய ஒரு கண் பார்வை சரியாகத்தெரியவில்லை என்று தன் தோழிகளிடம் சிந்து கூறியுள்ளார்.

தேர்வுகள் முடிந்தபின் அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்ததிங்கள்கிழமை தேர்வு முடிவுகள் வந்தபோது கூட சிந்து மருத்துவமனையில்தான் இருந்தார்.

பள்ளியின் முதல் மாணவியாக தான் தேர்ச்சி பெற்றதை அறிந்ததும், சிந்துவின் கண்களில் கண்ணீர் வடிந்தது. அதன்பிறகு எந்தச் சலனமும் இல்லாமல் அவருடைய உயிர் பிரிந்தது.

இப்படி சிந்துவைச் சாதனைக்கு இடையிலும் சோதனைக்குள்ளாக்கிப் பலி கொண்டுவிட்டது ரத்தப் புற்று நோய்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X