For Daily Alerts
Just In
கோவை: அண்ணன்-தம்பி விபத்தில் சாவு
கோவை:
கோவையில் உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிக்கச் சென்ற அண்ணன் தம்பி நசுங்கி இறந்தனர்.
கோவை புலியகுளம் சிறுகாளியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (45). இவர் தனியார்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரது தம்பி ஜெனி கிளாஸ் (36). இவர் வெல்டராக வேலை பார்த்து வந்தார். குன்னூரில் இவர்களது உறவினர்இறந்ததையடுத்து ஒரு மொபட்டில் துக்கம் விசாரிக்கச் சென்றார். பின்னர் இரவு குன்னூரிலிருந்து மொபட்டில்திரும்பிக் கொண்டிருந்தனர்.
கோவை அருகே பிரஸ் காலனி அருகே இருவரும் வந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி இவர்கள் மீதுமோதியது. இதில் இருவரும் அதே இடத்தில் நசுங்கி இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்துப் போலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Saturday, June 2, 2001, 5:30 [IST]