ஸ்டாலின் கைதாவாரா? பதில் கூற ஜெ.மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காண்ட்ராக்டரிடம் கமிஷன் பெற்ற வழக்கில் சென்னை மேயர் ஸ்டாலின் கைது செய்யப்படுவரா என்பது குறித்துநான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை என்றார் முதல்வர் ஜெயலலிதா.
வெள்ளிக்கிழமை சட்டசபை கூட்டம் முடிந்ததும், தமாகா தலைவர் மூப்பனார் அளித்த விருந்தில் கலந்துகொள்வதற்காக ஜெயலலிதா சென்றார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சட்டசபைக் கூட்டம் முடிந்து விட்டது. இன்னும் சில நாட்களில் ஸ்டாலின் கைது செய்யப்படுவாரா என்றுகேட்கிறார்கள். அதுகுறித்து நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை.
அதே போல் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை பனகல் பூங்காவில் கொண்டாட அனுமதிமறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன்தான் பதில் கூற வேண்டும். நான் எதுவும் கூறமுடியாது என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications