For Daily Alerts
Just In
சென்னையில் பலத்த மழை
சென்னை:
ஞாயிற்றுக்கிழமை காலை பெய்த பலத்த மழை சென்னை வெயிலின் சூட்டைப்பெரிதும் குறைத்தது.
தமிழகம் முழுவதும் கோடை கால வெயிலின் கடுமை மிகவும் அதிகமாக இருந்துவருகிறது. கோடை வெயில் தாங்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னும் வெயிலின் கடுமை குறையவில்லை.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை நகரில் பலத்த மழை பெய்தது.சென்னை நகரிலும், புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. காலை 6 மணிக்குபெய்யத் தொடங்கிய மழை நண்பகல் வரை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.
வெயில் கொடுமையால் வாடிவதங்கிய சென்னை நகருக்கு மக்களுக்கு இந்த மழைபெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த மழையின் காரணமாக வெயிலின் கொடுமைகுறைந்துள்ளது.
Comments
Story first published: Sunday, June 3, 2001, 5:30 [IST]