காவிரி நீர் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜெ. கோரிக்கை
டெல்லி:
தமிழக-கர்நாடக அரசுகளுக்கிடையே இருந்து வரும் காவிரி நதி நீர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு,விரைந்து தீர்வு காண வேண்டும் என்று பிரதமரிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் வாஜ்பாயையும் செவ்வாய்க்கிழமை சந்தித்தபோது அவர் இவ்வேண்டுகோளைவிடுத்துள்ளார்.
கச்சத் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்றும்வேண்டுகோள் விடுத்திருப்பதாகத் தெரிகிறது.
இதுதவிர, தமிழ் தேசிய விடுதலைப் படை, தமிழ் தேச எழுச்சிப் படை, அல்-உம்மா ஆகிய இயக்கங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் மத்திய அரசிடம் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான சர்க்காரியா கமிஷன் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அனுமதிக்க வேண்டும்என பிரதமரிடம் அவர் கோரிக்கை வைத்திருப்பார் எனத் தெரிகிறது. ஆனால், இது தொடர்பாக கருத்துத்தெரிவிக்க ஜெயலலிதா மறுத்து விட்டார்.