விசாரணை கைதி நெஞ்சுவலியால் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்ட விசாரணைக் கைதி நெஞ்சு வலியால் இறந்தார்.
கோவை துடியலூரைச் சேர்ந்தவர் குமார். கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக இவரை துடியலூர் போலீசார்திங்கள்கிழமை காலை கைது செய்தனர். பின்னர் இவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யஜீப்பில் ஏற்றிச் சென்றனர்.
பாதி வழியில், குமார் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறித் துடித்துள்ளார். எனவே, போலீசார் அவரை கோவைஅரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அரசு மருத்துவமனையில் குமார் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் குமாரின் உடல் அவரதுஉறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications