For Daily Alerts
Just In
அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு: ஜெ.
சென்னை:
முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கோடுதான் தனக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குதொடரப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆவேசத்துடன் கூறினார்.
முதல்வராகப் பதவியேற்ற பின், முதல் முறையாகப் பிரதமரைச் சந்திக்க டெல்லிக்குச் செல்வதற்கு முன்னர், சென்னைவிமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதுகண்டிக்கத்தக்கது. அரசியல் சட்டப்படி ஆளுநர் தன் கடமையைச் செய்துள்ளார்.
மரியாதை நிமித்தமாக மட்டுமே நான் பிரதமரைச் சந்திக்கப் போகிறேன். வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும்அல்ல. பிரதமர் தவிர, ஜனாதிபதி, உள்துறை அமைச்சர், சோனியா காந்தி ஆகியோரையும் மரியாதை நிமித்தமாகச்சந்திப்பேன் என்றார் ஜெயலலிதா.
Story first published: Tuesday, June 5, 2001, 5:30 [IST]