வீரப்பனைப் பிடிக்க தீவிரமாகிறது அதிரடிப்படை
பெங்களூர்:
வீரப்பனைப் பிடிப்பதில் ஈடுபட்டிருக்கும் தமிழக, கர்நாடக சிறப்பு அதிரடிப்படைகள் தங்கள் முயற்சியைத்தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழக அதிரடிப்படைத் தலைவராகத் தேவாரமும், கர்நாடக அதிரடிப்படைத் தலைவராக கெம்பையாவும் புதிதாகமீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, 2 அதிரடிப்படைகளும் உற்சாகமாகக் களத்தில் இறங்கி, வீரப்பன் வேட்டையைத் துரிதப்படுத்தியுள்ளனர்.
"1990-களில் வீரப்பனின் 100 பேர் கொண்ட கும்பலை 5 பேராகக் குறைத்த பெருமை தேவாரத்தையே சேரும்.அதனால் தேவாரம் மீண்டும் வந்திருப்பது அதிரடிப்படையினரைச் சுறுசுறுப்பாக்கியுள்ளது. வீரப்பனை நாங்கள்விரைவில் பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இப்போது மிகவும் அதிகரித்துள்ளது" என்று ஒரு உயர் போலீஸ்அதிகாரி கூறியுள்ளார்.
இதேபோல், கர்நாடக அதிரடிப்படைத் தலைவராக மீண்டும் கெம்பையா நியமிக்கப்பட்டிருப்பது, கர்நாடக சிறப்புஅதிரடிப்படையையும் சுறுசுறுப்படைய வைத்திருக்கிறது.
இவர்கள் 2 பேர் மீதும் பல புகார்கள் இருந்த போதிலும், வீரப்பனைப் பிடிப்பதே தற்போதைய முக்கியப் பணியாகஇருப்பதால், அனைத்தையும் மறந்து அதிரடிப்படை வீரர்கள் அதிக உற்சாகத்துடன் வீரப்பனைத் தேடிக் காட்டிற்குள்மீண்டும் புகுந்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.