For Daily Alerts
Just In
சென்னை கோர்ட்டில் 33 புதிய அரசு வழக்கறிஞர்கள்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 33 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிவில் மற்றும் வரி தொடர்பான வழக்குகளுக்கு 17 பேரும் கிரிமினல் தொடர்பான வழக்குகளுக்கு 6 பேரும் அரசுசார்பாக வாதாடுவதற்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 16 பேர் சிறப்பு கூடுதல் அரசு பிளீடர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் சிறப்பு அரசுபிளீடர்கள் ஆவர்.
திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டு, ராஜிநாமா செய்யாத 10 வழக்கறிஞர்கள் மற்றும் 2 பிளீடர்கள் பதவி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் சஞ்சய் ராமசாமி. முன்னாள் எம்.எல்.ஏவான இவர்,கடந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசாமியின் மகன் ஆவார்.
Comments
Story first published: Wednesday, June 6, 2001, 5:30 [IST]