சென்னை கோர்ட்டில் 33 புதிய அரசு வழக்கறிஞர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 33 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிவில் மற்றும் வரி தொடர்பான வழக்குகளுக்கு 17 பேரும் கிரிமினல் தொடர்பான வழக்குகளுக்கு 6 பேரும் அரசுசார்பாக வாதாடுவதற்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 16 பேர் சிறப்பு கூடுதல் அரசு பிளீடர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் சிறப்பு அரசுபிளீடர்கள் ஆவர்.
திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டு, ராஜிநாமா செய்யாத 10 வழக்கறிஞர்கள் மற்றும் 2 பிளீடர்கள் பதவி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் சஞ்சய் ராமசாமி. முன்னாள் எம்.எல்.ஏவான இவர்,கடந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசாமியின் மகன் ஆவார்.












Click it and Unblock the Notifications