For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை கோர்ட்டில் 33 புதிய அரசு வழக்கறிஞர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 33 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிவில் மற்றும் வரி தொடர்பான வழக்குகளுக்கு 17 பேரும் கிரிமினல் தொடர்பான வழக்குகளுக்கு 6 பேரும் அரசுசார்பாக வாதாடுவதற்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 16 பேர் சிறப்பு கூடுதல் அரசு பிளீடர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் சிறப்பு அரசுபிளீடர்கள் ஆவர்.

திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டு, ராஜிநாமா செய்யாத 10 வழக்கறிஞர்கள் மற்றும் 2 பிளீடர்கள் பதவி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் சஞ்சய் ராமசாமி. முன்னாள் எம்.எல்.ஏவான இவர்,கடந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசாமியின் மகன் ஆவார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X