சந்தன கிடங்கு தீ விபத்து: விசாரணை தீவிரம்
சென்னை:
கடந்த தி.மு.க.ஆட்சியில் திருப்பத்தூரில் சந்தனக் கிடங்கில் நடந்த தீ விபத்து குறித்து விசாரணை செய்து, அந்தவிவரங்கள் தமிழக அரசிடம் தரப்பட்டுள்ளது. இதில் பல முக்கிய புள்ளிகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியின் போது திருப்பத்தூரில் இருந்த சந்தனக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில்சந்தனக்கிடங்கு எரிந்து போனது.
அப்போதைய அரசு இந்த தீ விபத்து குறித்து எந்த விதமான விசாரணையும் மேற்கொள்ளவில்லை. தற்போதையஅ.தி.மு.க. ஆட்சி அந்த தீ விபத்து குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழக வனத்துறை அமைச்சர் பிறப்பித்த உத்தரவின்படி, வனத்துறை போலீசார் விசாரணை நடத்தி, விசாரணைஅறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
தீ விபத்திற்கான உண்மையான காரணம், உண்மையான சேத மதிப்பு, இந்த சதியில் சம்பந்தப்பட்டவர்கள் விவரம்உள்ளிட்ட விவரங்கள் அந்த விசாரணை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.
தீ விபத்தின் போது சில 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தன மரங்கள் இருந்ததாக தி.மு.க. அரசால் கூறப்பட்டது.ஆனால் தற்போது நடத்தப்பட்ட விசாரணையில் எரிந்து போன சந்தனக் மரங்களின் மதிப்பு ரூ 1,200 கோடி எனதெரிய வந்துள்ளது.
வனத்துறை போலீசார் கொடுத்துள்ள அறிக்கையில் தி.மு.கவைச் சேர்ந்த பல முக்கிய புள்ளிகள் பெயர்கள்சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications