இந்தியா -ஜிம்பாப்வே டெஸ்ட் இன்று தொடக்கம்
பொலாயேவா (ஜிம்பாப்வே):
இந்திய- ஜிம்பாப்வே இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஜிம்பாப்வேயின், பொலாயோவில்வியாழக்கிழமை தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. ஜிம்பாப்வேயுடன் இந்தியாஇரண்டு டெஸ்ட் பந்தயங்களில் விளையாடும்.
அதன் பின் இந்தியா, ஜிம்பாப்வே, மேற்கிந்தியத்தீவுகள் அணி ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் 1 நாள் போட்டிநடைபெறும்.
இந்திய கிரிக்கெட் அணி அயல்நாடுகளில் விளையாடி வெற்றி பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்தடெஸ்ட் தொடரையும், 1 நாள் போட்டிகளையும் வென்றுவிட வேண்டும் என்பதில் இந்தியா தீவிரமாக உள்ளது,
ஜிம்பாப்வே நாட்டின் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் 5வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன்சிங்சேகர்க்கப்பட்டுள்ளார். 7 பேட்ஸ்மேன்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல் டெஸ்ட்போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள்:
சவுரவ் கங்குலி (கேப்டன்), சிவ்சுந்தர்தாஸ், சடகோபன் ரமேஷ், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட்,வி.வி.எஸ்.லட்சுமண், சமீர் தீகே (விக்கெட் கீப்பர்), ஜவஹல் ஸ்ரீநாத், ஜாஹிர்கான், ஹர்பஜன் சிங், தேபஷீஷ்மொஹந்தி, ஆசிஷ் நெகரா.
ஜிம்பாப்வே அணி வீரர்கள்:
ஹீத் ஸ்டிரிக் (கேப்டன்), கய் விட்டல், ஆண்டி பிளவர், கிரான்ட் பிளவர், ஸ்டூவர்ட் கார்லிஸ்ஸி, டியான் இப்ராகிம்,பிரையான் மர்பி, பிரிஜ்டன் வதாம்பா, டிராவிஸ் பிரண்ட், காவின் ரீனி.
இந்த போட்டி இந்திய நேரப்படி நண்பகல் 12.30 மணிக்கு துவங்குகிறது.