தேயிலை விவசாயிகளுக்கு 31 லட்சம் நஷ்டஈடு: ஜெ. வழங்கினார்
சென்னை:
தேயிலை விவசாயிகள் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா அக்கறை காட்டி வருவது பாராட்டுக்குரியது என்றுசட்டசபை த.மா.கா. தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
சென்னையில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி மாவட்ட தேயிலைத் தொழிலாளர்கள்பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா தீவிர அக்கறை காட்டி வருவது பாராட்டத்தக்கது.
கடந்த ஆண்டு நீலகிரி தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த போலீஸ்அடக்குறையால் ஏற்பட்ட வன்றையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 31 லட்சம் நஷ்ட ஈடுகொடுக்குமாறு அரசுக்கு மனித உரிமைக் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதை ஏற்று ரூ. 31 லட்சத்தை முதல்வர்ஜெயலலிதா வழங்கியுள்ளார். அதற்காக அவரை பாராட்டுகிறேன்.
மேலும், நீலகிரி விவசாயிகளுக்கான மானியத்தை ரூ. 10 ஆக மாற்ற வேண்டும் என்றும் இதற்கான செலவைமத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமரிடம் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார். அதையும்பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.
போலீஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தேயிலை விவசாயிகளுக்கு மனித உரிமைக் கமிஷன் சொன்ன தொகையானரூ. 31 லட்சத்தை முதலமைச்சர் ஜெயலலிதா வவங்கினார். பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் ஒருவர் அதைப்பெற்றுக் கொண்டார்.
சமீபத்திய தேர்தலில் நீலகிரி பகுதியில் திமுகவை மண்ணைக் கவ்வச் செய்தது தேயிலை விவசாயிகள் பிரச்சனைதான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications