For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விழுப்புரம் அருகே ரயில் தடம்புரண்டது: 6 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

விழுப்புரம் மாவட்டம் ஆளில்லாத ரயில் கிராஸிங்கில் ரயில் தடம்புரண்டதில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

ஆளில்லாத ரயில் கிராசிங்கில் ரயில் வந்து கொண்டிருந்த போது அது பக்கவாட்டிலிருந்து வந்து கொண்டிருந்தடிராக்டர் மேல் மோதி பின்னர் தடம்புரண்டது.

இச்சம்பவத்தில் உயிரிழந்த அனைவரும் விருத்தாச்சலம்- சேலம் ரயிலில் வந்தவர்கள். இந்த ரயில் விருத்தாச்சலம்அருகே கூத்தக்குடி கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது கூலித் தொழிலாளர்களை ஏற்றி வந்த டிராக்டர் மீதுமோதி தடம்புரண்டது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் யாரென்று இன்னும் அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. இவ்விபத்தில் டிராக்டர்சேதமடைந்தது. விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் ரயில்நிலைய ஊழியர்கள் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்தவிபத்தினால் ரயில் போக்குவரத்து சில மணிநேரங்கள் பாதிக்கப்பட்டது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X