இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.12 ஆயிரம் கொள்ளை
சேலம்:
சேலத்தில் உள்ள நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.12 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டது.
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள தொலைபேசி இணைப்பகத்திற்கு மேல் 3 மாடிகள் உள்ளன. 2வது மாடியில்சவுத் இந்தியன்பாங்க்கும், 3வது மாடியில் நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியும் உள்ளன.
சவுத் இந்தியன் பாங்க்கில் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. ஆனால், கொள்ளையர்களால் வங்கியில் இருந்தபணத்தை எடுக்க முடியவில்லை.
இதையடுத்து மாடியில் இருந்த இன்சூரன்ஸ் கம்பெனியின் பூட்டை உடைத்து அங்கு நுழைந்த கொள்ளையர்கள்அங்கிருந்த லாக்கரை உடைத்தனர். லாக்கரின் உள்ளே இருந்த ரூ.12 ஆயிரம் மட்டும் இவர்களது கையில்கிடைத்தது.
மேலும், வேறு அறையில் இருந்த பீரோவை உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்கள் முயற்சிபலிக்கவில்லை. அதனால் அப்படியே விட்டுவிட்டு கொள்ளையர்கள் சென்றுவிட்டனர்.
சேலம் அருகே உள்ள குள்ளம்பட்டி வேளாண்மைக் கூட்டுறவு பாங்கிலும் இதேபோன்ற கொள்ளைச் சம்பவ முயற்சிநடந்தது குறிப்பிடத்தக்கது.