பெருகி வரும் போலி டாக்டர்கள்
சேலம்:
"போலி பட்டங்களை வழங்கி வரும் மருத்துவ நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலத்தில்நடந்த இந்திய மருத்துவர்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
சேலத்தில் இந்திய மருத்துவர்கள் சங்க மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலதலைவர் டாக்டர் விஸ்வநாதன், செயலர் டாக்டர் பக்தவத்சலம் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
போலி டாக்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சித்தா, ஆயுர்வேதம்,யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவத்தில் இது அதிகமாகக் காணப்படுகிறது.
இதற்காக அலோபதியின் எதிரிகள் இவை என நாங்கள் கூறவில்லை. பத்தாம் வகுப்பு படிக்காத ஒருவர், போலிமருத்துவக் கல்வி நிறுவனத்தை நடத்தி பட்டம் வழங்கிறார். இது தான் வேடிக்கையானது.
டிஎஏஎம்எல், ஆர்ஐஎம்பி, ஆர்எச்எம்டி, எல்ஜேஎம், எம்பிபிஎஸ், எம்டி (அக்குபஞ்சர்), போன்ற பேலியானபட்டங்களை அளிப்பது வேதனைக்குரியது. இது இந்திய மருத்துவச் சட்டம் 19 (6) ன் கீழ் சட்ட விரோதமானது.இன்னும் கிராமப் புறங்களில் வாத்தியார்கள், கம்பவுண்டர்கள், கால்நடை ஆய்வாளர்கள், பாரமெடிக்கல்படித்தவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் பகுதி நேர சிகிச்சை மற்றும் கிளினிக் வைத்து வருகின்றனர்.
மேலும், பிஸியோதெரபி படித்தவர்கள் தங்களை டாக்டர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர். இதுவும் தவறானதாகும்.இதனால், போதைப் பொருள்களடங்கிய மருந்துகளை நோயாளிக்கு அளிக்கின்றனர். எனவே, இதனைத் தடுக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. இத்தகையவர்களைக் கண்டுபிடித்து போலீசார் கைது செய்ய வேண்டும்என்றனர்.












Click it and Unblock the Notifications