ஜெ.வீட்டில் நுழைய தினகரன், பாஸ்கரனுக்குத் தடை
சென்னை:
சசிகலாவின் அக்காள் மகனும் அ.தி.மு.க எம்.பியான தினகரனும், ஜெயா டிவியை நிர்வாகித்து வரும் பாஸ்கரனும்போயஸ் தோட்டத்திற்கு வருவதற்கு முதல்வர் ஜெயலலிதா தடை விதித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. இவரது கணவர் நடராஜன். நடராஜனுக்கும்,ஜெயலலிதாவுக்கும் இடையே நீன்டகாலமாக சுமுகமான உறவு கிடையாது. மோதல்தான் இருந்து வருகிறது.
சென்ற புதன்கிழமை சசிகலாவின் அக்காள் மகனும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனும்,அவரது தந்தை விவேகானந்தனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் தான் வசிக்கும் போயஸ் தோட்டத்திற்குள் தினகரனும், பாஸ்கரனும் முன் அனுமதியின்றிநுழையக் கூடாது என உத்தவிட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான பலரும் தினகரனையும், பாஸ்கரனையும் சந்தித்து ஆசி பெற்றதாக உளவுத்துறை மூலமாக ஜெயலலிதாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இரவு நேரங்களில் இவர்கள் ரகசியமாக நடராஜனை சந்திப்பதாகவும், போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்துகொண்டு அங்கு வரும் அமைச்சர்களை அதிகாரம் செய்து வருவதாகவும ஜெயலலிதாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதே நிலை தொடருமானால் , இம்முறையும் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகரிப்பதாக குற்றச்சாட்டுஎழக்கூடும். அது தன்னை பாதிக்கக்கூடும் என்பதால் ஜெயலலிதா இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications