திமுக பஞ்சாயத்து தலைவி கைது: மகளிரணி கண்டனம்
சென்னை:
தி.மு.க. பஞ்சாயத்து தலைவி கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க. மகளரணியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் கரூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் முதல்வர் ஜெயலலிதா படம் மாட்டுவது தொடர்பாக பிரச்சினைஎழுந்தது. அ.தி.மு.க தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதா படத்ததை மாட்ட வேண்டும் என கூறினர்.
ஆனால் அதற்கு தி.மு.க.பஞ்சாயத்து தவைவி எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக வாக்குவாதம் முற்றியது.இதில் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் உடைத்தெறியப்பட்டது.
கலவரம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாவட்ட ஊராட்சி மன்றக் குழுத் தலைவர்,துணைத் தலைவர் உள்பட அதிமுக உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தி.மு.க பஞ்சாயத்து தலைவி கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க. மகளிரணியினர் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தி.மு.க. மகளிரணியினர் சென்னையில், வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:
கரூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஜெயலலிதா படத்தை மாட்ட வேண்டும் என தகராறு செய்த அ.தி.மு.க.உறுப்பினர்கள் மாவட்ட பஞ்சாயத்து தலைவி அறைக்குள் நுழைந்து அங்கிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி,அண்ணா ஆகியோர் படத்தை உடைத்தெறிந்தனர்.
பஞ்சாயத்து தலைவியை தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வன்முறையில்ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களை கைது செய்யாமல், பஞ்சாயத்து தலைவர் லட்சுமி துரைசாமியையும் துணைத்தலைவர் உமாபதியையும் கைது செய்து சிறையில் சிறையில் அடைக்க உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவைதி.மு.க. மகளிரணி சார்பில் கண்டிக்கிறோம்.
தி.மு.கவைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களை பழிவாங்க வேண்டும் என திட்டமிட்டுமுதல்வர் ஜெயலலிதா நடத்தி வரும் செயல்கள் பொதுமக்களின் கேலிக்குள்ளாகி இருக்கிறது.
மாவட்ட பஞ்சாயத்து தலைவி லட்சுமி துரைசாமியை பெண் என்றும் பார்க்காமல் கிரிமினல் குற்றவாளியாகசித்தரிப்பது ஜெயலலிதாவின்பழி வாங்கும் எண்ணத்தையே காட்டுகிறது.
ஆளும் கட்சியின் இந்த செய்கையை தி.மு.க. மகளிர் அணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் என கூறியுள்ளர்












Click it and Unblock the Notifications