For Daily Alerts
Just In
கிருஷ்ணகிரி கலவரம்: நீதி விசாரணைக்கு ஜெ.உத்தரவு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில் கடந்த 11 ம் தேதி பாமக பிரமுகர் தாக்கப்பட்டார். அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தற்போது கிருஷ்ணகிரியில் அமைதி திரும்பியுள்ளது.
நீதி விசாரணைக்கு உத்தரவு:
கிருஷ்ணகிரி கலவரம், துப்பாக்கிச்சூடு குறித்து நீதி விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து விசாரணை அதிகாரியாக கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ.மதிவாணனை தர்மபுரி மாவட்ட கலெக்டர்அபூர்வா நியமித்துள்ளார்.
Comments
Story first published: Saturday, June 16, 2001, 5:30 [IST]