திபேந்திராதான் குற்றவாளி: நேபாள மக்கள் நம்ப மறுப்பு
காட்மாண்டு:
நேபாள மன்னர் குடும்பத்தில் நடந்த படுகொலைக்கு இளவரசர் திபேந்திராதான் காரணம் என்று விசாரணைக்கமிஷன் சமர்பித்த அறிக்கையை நேபாள மக்கள் நம்ப மறுக்கின்றனர்.
சமீபத்தில் தனது காதலி தேவயானி ரானாவைத் திருமணம் செய்து கொள்ள தனது பெற்றோர் மறுப்புதெரிவித்ததையடுத்து அரசர், அரசி உள்பட குடும்பத்தையே கூண்டோடு படுகொலை செய்தார் பட்டத்து இளவரசர்திபேந்திரா.
மன்னர் குடும்ப படுகொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து விசாரணைக்குழு நேபாள மன்னர் குடும்ப படுகொலைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுதனது அறிக்கையை சமர்பித்தது.
இந்த அறிக்கையில், மன்னர் குடும்ப படுகொலைக்கு திபேந்திராதான் காரணம் என்று கூறப்பட்டது.
மேலும், திபேந்திரா அடிப்படையில் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையானவர். அடிக்கடிதுப்பாக்கி வேட்டையாடுபவர். விருந்த நடந்த அன்று மிகவும் தாமதமாக வந்து விருந்தில் கலந்து கொண்டார்.அதுமட்டுமின்றி அப்போது மிகவும் அதிகமாகக் குடித்திருந்தார்.
விருந்துக்கு வருமுன் அவர் தனது காதலி தேவயானி ரானாவுடன்தான் இருந்தார். பின்னர் விருந்து நடந்த அறைக்குவந்து ராணுவ உடை அணிந்து கொண்டு கையில் கறுப்பு உறை அணிந்து கொண்டு அனைவரையும்கண்மூடித்தனமாக சுட்டார். மன்னர் குடும்ப படுகொலைக்கு திபேந்திராவின் காதல் விவகாரம்தான் காரணம் என்றுஅந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் திபேந்திராதான் குற்றவாளி என்பதை தலைநகர் காட்மாண்டு உள்பட நேபாளம் முழுவதும் உள்ள மக்கள்நம்ப மறுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications