நீலகிரியில் ரூ 1 கோடி கஞ்சா செடிகள் அழிப்பு
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
நீலகிரியில் ரூ 1 கோடி மதிப்புள்ள கஞ்சாப் பயிரை வனத்துறையினர் தீ வைத்து அழித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கஞ்சாப் பயிரிடப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து மாவட்ட வனத்துறை அதிகாரி யுவராஜ், கஞ்சாச் செடிகள் பயிரிட்டுள்ள இடத்தைக் கண்டறியஉத்தரவிட்டார். இதையடுத்து வனத்துறையினர் கஞ்சா செடிகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கீழ்குந்தாப் பகுதியில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததை வனத்துறையினர்கண்டு பிடித்தனர்.
இதனை பெட்ரோல் ஊற்றி எரித்து முற்றிலும் அழித்தனர். இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த இந்தகஞ்சா செடிகளின் மதிப்பு ரூ 1கோடி என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications