வங்கதேசத்தில் குண்டு வெடிப்பு: 22 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
டாக்கா:
வங்காளதேசத்தில் சனிக்கிழமை இரவு நடந்த பயங்கரக் குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும்அதிகமானோர் காயமடைந்தனர்.
நாராயங்கஞ்ச் என்ற இடத்தில், வங்காளதேசத்தின் ஆளும் கட்சியான அவாமி லீக் நடத்திய ஒரு பேரணிக்கூட்டத்தின் போதுதான், இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது.
இக்கூட்டத்தில் சுமார் 400 கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டதாகவும், கட்சியைச் சேர்ந்த பல உள்ளூர்த்தலைவர்களும், 4 பெண்களும், ஒரு குழந்தையும் இறந்தவர்களில் அடங்குவர் என்றும் போலீஸார் கூறினர்.காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
கடந்த 2 ஆண்டுகளில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களிலேயே, இதுதான் மிக மோசமான சம்பவம் என்றுகூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications